தத் தத் தரி கிட
தத் தத் தரி கிட
மார்பினில் முப்பது உரோமங்கள் இருக்க
முப்பதும் மூத்து முடங்கி கிடக்க
உரசியபடியே உறவாடினான்,
உப்புக்கும் விளங்காத வயோதிகக்கிழவன் |
அவனின் கண்ணில் அவளும் தோன்றினாள்
பொய்யெனத்த்தெறிந்தும் மெய்யாய் மருகினான்
அனலும் தணிந்த அறிவில் அணுகினான்
அண்ணலும் தேறினான், அவளும் தேறினாள் |
நெடு நல் வாடையென வாழ்ந்த இவ்விருவரும்
இருக்கையில் புரிந்தது மிகவும் குறைவே
இழந்தபின் இருக்கையில் இருக்கையில் இளகி
நாடிய நட்பே இறந்தது இழப்பே |
சகலமும் நாடி, தடம் பல ஓடி
சிறப்புகள் கண்டோம், சிலபல நொடியே
அவப்பெயர் இன்றி, தவப்பெயர் பெற்றது
சிரம் நிமிர் நடை கொள
சிவத்தவம் பெற்றோம் |
இனி என உளவாம் உலகில் நாம் தொழ
எமையே தந்தோம் சகலரும் தழைத்திட
அணுவும் அடங்கி அறிவும் புடைந்திட
புலன்கள் மழுங்கி புதுமுகம் புலர்ந்திட
புன்னகை புரிந்தான் புதிதொன்று புரிந்திட
புதிதாய் சிரித்தான் புது உடல் தரித்திட |
தத் தத் தரி கிட |
Good try congratulation but
Tamil words mistake no problem
Nice poem keep it up.
Thank you Ka.