எதிர் மறையாய் – உன் எதிரே

நிழல் நிஜமாய் – நிஜம் நகலாய்

கண் திறந்தே கற்பனையில் –
காண்பதுவோ துல்லியமாய்

மொழியிருந்தும் சொல்லின்றி –
சொல்லறிந்தும் மொழியாமல்

கேளாமல் புரிந்ததுபோல –
புரியாமல் கேட்கும் செவி

பார்வைகளால் பருகியதும் –
வாய்ப்பிளந்தே பார்த்ததுவும்

செழிப்பினிலும் வெறுமைகாண –
இன்மையிலும் செழித்திருந்தோம்

இடமிருந்து வலம் வந்தாய் –
வலம் வந்த இடம் பெயர்ந்தேன்

உனைச்சேர்ந்த எண்ணங்களால் –
எண்ணுவதை மறந்துவிட்டேன்

நீ சிலிர்க்கும் உணர்வுகளை –
நானுண்டு நெகிழ்ந்திட்டேன்

உனைச்சார்ந்த உறவுகளை –
எனதாக்க எனை துறந்தேன்

வடம் தரித்து – தடம் பதித்து –
மலர் தரித்த – உற்ச்சவராய் தேர்ந்தேனே

மனம் புகுந்து – மணம் மலர்ந்து –
மதம் களைந்து – மனம் மகிழ்ந்தேன்

அகம் புறமாய் – புறம் அகமாய் –
எதிர் மறையாய் – உன் எதிரே

வாழிய நீவும் – யுகம் பல வாழியவே!

காதலர் தின வாழ்த்துக்கள்!

34 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *